வல்வெட்டித்துறை 8 ஆவது கலை இலக்கிய விழா கோலகாலமாக ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2018 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 8 ஆவது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா இன்று 1ஆம் திகதி திங்கட்கிழமை சற்று முன்னர் ஆரம்பமானது.
வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு கி.விசாகரூபன் (பேராசிரியர்.தமிழ்த்துறை, கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு பா.உதயகுமார் (தங்கத்தமிழன்) (எழுத்தாளர், இயக்குனர், நடிகர் ) அவர்களும், திரு.இரா. ஸ்ரீநடராசா (யா/ தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயம் ) அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
நிகழ்வின் தொடக்கமாக விருந்தினர்கள் பறை இசை மேளம் மற்றும் கலைஞர்கள் அணிவகுப்புடன் வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து பிற்பகல் 04.30 மணிக்கு அழைத்து வரப்பட்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: January 01, 2018 at 21:53
சிறப்பு வாழ்த்துக்கள்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.