உடுப்பிட்டி வீரபத்திரர் சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான் தீர்தோற்சவம் நேற்று திங்கட்கிழமை கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தீர்த்தக் கேணியில் இடம்பெற்றது. வீரபத்திரர் சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் கடந்த 5 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி கடந்த 10 தினங்களாக இடம்பெற்றுவந்தது.
வருடாந்த மகோற்சவத்தின் சிறப்பம்சமாக கடந்த 14.06.2016 செவ்வாய்க்கிழமை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்திர சிற்ப திருமஞ்ச வெள்ளோட்ட வைபவமும், திருமஞ்ச நிகழ்வும் பெருமளவான பக்கதர்கள் புடைசூழ மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.