இடம்பெற்றுவரும் கோடை காலம் காரணமாக இன்று வளவியிலும் கடும் வெயில் நிலவியிருந்தது. இந்த கடும் வெயிலின் மத்தியிலும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் இன்றைய தேர்த் திருவிழாவின் போது ஏராளமான அடியார்கள் அங்கப்பிரத்ட்சனை மற்றும் அடிகழித்தலில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 8 மணிக்கு ஆரம்பமான வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து தேர் வீதியுலா சுமார் 1030 மணிக்கு ஆரம்பமாகி அம்பாள் தேர் முட்டிக்கு சுமார் 1230 மணியளவில் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து பச்சை சாத்துதல் ஆரம்பமாகி நிகழ்வுகள் பிற்பகல் 0330 மணி வரை நீடித்தது.
கீழே படங்களில் வீதிக்கு நீர் பாச்சும் உழவு இயந்திரத்தையும், அங்கப் பிரதட்சணை செய்யும் அடியவர்களுக்கு நீர் ஊரற்றுவதையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.