69 உடல்களுடன் நீரின் அடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள பங்காளதேச பயணிகள் கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2015 (புதன்கிழமை)
கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதி அனர்த்தத்துக்குள்ளான பங்காளதேச பயணிகள் கப்பல் (Ferry) மீட்புக்கப்பல் ஒன்றினால் (Salvage ship) நீரின் அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சுழியோடிகளும் கிராமவாசிகளும் மோதி கவின்றபின் நீருக்குள் தாண்டிருந்த கப்பலுக்குள் இருந்தும் அதனைச் சுற்றிவர இருந்த பகுதிகளில் இருந்தும் 69 உடல்களை மீட்டுள்ளனர்.
Motor Vessel “Mostafa” எனப் பெயரிடப்பட்டிருந்த குறித்த இந்த பயணிகள் கப்பல் ஆனது கடந்த ஞாயிற்று கிழமை 150 பேருடன் பங்காளதேசத்தின் பத்மா ஆற்றில் சென்றவேளை, எதிரில் வந்த எண்ணைக் கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த சம்பவத்தின் போது 50 பேர் உடனடியாக மீட்கப்பட்டதுடன் 30 பேர் நீந்தி கரை சேர்ந்திருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.