ஆனந்தன் நினைவு நீச்சல் தடாக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2017 (வெள்ளிக்கிழமை)
மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று மே மாதம் 26 ஆம் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறையை சந்தியை அண்மித்துள்ள முன்னர் இலங்கை இராணுவ முகாம் அமைந்திருந்த, இதுவரை இலங்கை சுங்கத்திற்கு சொந்தமான ரேவடிப் கடற்கரையை ஒட்டிய பகுதியிலேயே குறித்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.
இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வு அடிக்கல் நாட்டும் வைபவம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிஜயசேகர பிரதி அமைச்சர் எச்.எம எம்.ஹரீஸ் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன், ஆளுநர் றெஜினோல்ட் கூரே மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் M.K சிவாஜிலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை சுங்கத்திற்கு சொந்தமான குறித்த நிலத்தை வல்வை நகரசபைக்கு கையகப்படுத்துவதற்கு வட மாகாண சபை உறுப்பினர் M.K சிவாஜிலிங்கம் கடுமையாக முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனந்தன் நீச்சல் தடாகம் தொடர்பாக நாம் வெளியீட்ட செய்திகளின் இணைப்புக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.