பக்தி மிகக் கொண்டு பணிந்து நின்றனர் இரங்கினான் இறைவன்
இவர்களுக்காய் யாவருக்கும் அருள் மழை பொழிந்தான்
யாவரும் மகிழ்ந்தனர் இறைவன் கருணை கண்டு களிப்பு மிகக்கொண்டனர்
இவர்தம் வேதனையாம் இருள் அகல மகிழ்ச்சி ஒலி போற்றியதே
பார்க்கும் இடம் எல்லாம் பேரொளியாய் பரவியது
இத்தினமே திருக்கார்த்திகைத் திருநாளாம் விளக்கீடு
புராணங்கள் பேசிடுமே விளக்கீட்டின் பலன் யாவும்
பணிந்திடுவோம் - நாமும் எலாம் விளக்கீட்டின் பலன் பெற்றிட
ஏற்றிடுவோம் தீபங்கள் இருள் மங்கிட ஒளி பொங்கிட
"இறையருள் தேக்கிடுவோம் அக இருள் போக்கிடுவோம்"
மகாவெலியை மனதிற் கொண்டு நாமும் இறையருள் பெற்றிட
வீடுகளில் தீபமேற்றி -வீட்டு வாசலிலே பெருந்தீபம் அமைத்து
அதனை சுற்றி வலம் வந்து பெரியோரும் சிறியோருமாய் பக்தி சிரத்தையுடன்
"மகாவெலி கண்பார் - எங்கும் கண்பார் - எங்களையும் கண்பார்"
எனபக்தியுடன் கைதட்டி பாடிமகிழ்ந்திடுவோம்.
சொர்கப்பனைப் பேரொளி
ஆலயங்களிலே வீதி வலத்திற்காக இறைவன் எழுந்தருளி வருகையில் ஆலய முகப்பிலே பெருவடிவிலே செயற்கை விருட்சம் ஒன்று அமைத்து சொர்கப்பனையான இவ்வமைப்பை பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் சூழ நின்று எரியூட்டிப் பேரொளி வீசச்செய்தல் விளக்கீட்டின் ஆலய நிகழ்வுகளின் உற்சமானது இப்பெரோளியாம் சோதிவடிவிலே யாவரும் இறைவனைக்கண்டு - வணங்கிடுவோம் பணிந்திடுவோம்.