யாழில் நடைபெறும் பனை அபிவிருத்திக் கண்காட்சியில் பல பனைசார் பொருட்கள் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2015 (சனிக்கிழமை)
வடமாகாண சபையால் கடந்த 22 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியானது பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு யாழ் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி தற்பொழுது இடம்பெற்று வருகின்றது
வடமாகாணக் கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சங்கமும் பங்கேற்கும் இக்கண்காட்சி தினமும் காலை 10 மணியில் இருந்து மாலை 8 மணிவரை நடைபெறுகின்றது.
இக் கண்காட்சியில் பனைசார் கைவினைப் பொருட்கள், பனைசார் பாரம்பரிய உணவுவகைகள், பனைசார் ஓளடதங்கள், பனைவள அபிவிருத்தி ஆய்வு முயற்சிகள், அலங்காரப் பனைத்தாவரங்கள் பதினைந்து காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தினமும் மாலை நேரங்களில் தமிழர் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டும் வருகின்றன. அத்தோடு கண்காட்சி அரங்கில் பனை உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களில் இருந்து அதிஸ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட இருப்பதோடு மாணவர்களிடையே போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் பனை அபிவிருத்தியில் பெரும் பங்காற்றிய அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்களைக் கௌரவிக்கும் முகமாகவே,வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் அவரது நினைவு தினத்தைத் தொடக்கமாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுவது வருவது குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் கண்காட்சியில் இடம்பெற்ற சில பனைசார் பொருட்களைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
sinnadurai sivanesan (srilanka)
Posted Date: July 26, 2015 at 04:11
The palmyrah development board exhibition is a great endeavour to promote the talent and skill of our
people and i wish that everyone of us have a onus to promote it.we should find a way to export these
products to foreign countries to generate income for our people. also the tamil diaspora should be encouraged to facilitate promotion of our handicrafts.its high time now that they should participate for
our people in our mother land
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.