படத்தில் காணப்படுவது வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரியை அண்டி ஒற்றை மரத்துடன் காணப்படும் ஊரிக்காட்டு பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். இந்தப்பகுதி 1985 ஆம் ஆண்டு வரை ஏராளமான பசுமையான மரங்களுடன் மிகவும் செழிப்பாக காணப்பட்டிருந்தது.
கல்லூரிக்கு சற்று முன்னால் உள்ள இடத்தில் முன்னர் ஏராளமான பனை மரங்கள் பிரதான வீதியிலிருந்து கிட்டத்தட்ட கடற்கரை வரை வியாபித்திருந்ததும், மாலை நேரங்களில் நூற்றுக் கணக்கில் மைனாக்கள் இந்த பனை மரங்களில் கூடுவதும் இந்த இடத்திற்கே பிரத்தியேகமாகவிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.