யாழ் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் சிவசுந்தரம்( பழம் அக்கா) அவர்கள் 22.04.2016 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து (சம்மாட்டியார்) பாலமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சோபனா அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பகவதிஅம்மா தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சக்திவேல் (கண்ணன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
கீர்த்தனன் அபிநயா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 26.04.2016 செவ்வாய்கிழமை அன்று மாலை 04.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் (ஆலடி ஒழுங்கை வல்வெட்டித்துறை) நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்க்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.