வல்வை கல்வி மன்ற நில அளவை விவகாரம், சிவாஜிலிங்கம், வல்வை நகரசபை ஆட்சேபனை தெரிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2014 (வெள்ளிக்கிழமை)
நேற்று 24.04.14 அன்று அரசினால் அண்மையில் வல்வையில் போலீஸ் நிலையம் அமைக்கும் நோக்குடன் சுவீகரிக்கப்பெற்ற வல்வைக் கல்வி மன்றம் அமைந்திருந்த காணியில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளினால் நில அளவை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கு வட மாகாணசபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வை நகரசபைத் தரப்பிலிருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. ஆட்சேபனைகள் நில அளவையாளரினூடாக, யாழ் நில அளவைத் திணக்களத்தின் சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.
குறித்த தனியாருக்குச் சொந்தமான காணியின் உரிமையாளருக்கு அரச நில அளவைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நில அளவை அரச நில அளவையாளரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த காணி காணி சுவீகரிப்புச் சட்டம் பிரிவு 2 இன் கீழ், சுமார் 3 மாதங்கள் முன்பு சுவீகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.