கெருடயம்பதி மாயவர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/09/2014 (சனிக்கிழமை)
ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை (23.09.2014) அன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
17 தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் 06.10.2014 திங்கட்கிழமை அன்று மாலை 06.00 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 07.10.2014 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு தேர்த் திருவிழாவும் மற்றும் 08.10.2014 புதன்கிழமை அன்று காலை 06.00 மணிக்கு மாயவர் விசேட பூசைகளைத் தொடர்ந்து உப்புத் தண்ணீர் தீர்த்தமாடுவதற்காக ஊறணி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளி அங்கு தீர்த்தமாடுவார்.
இம் மாயவர் ஆலயமானது வல்வெட்டித்துறையை அண்டியுள்ள கிராமமான கெருடாவிலில் அமைந்துள்ள ஒரேயொரு மாயவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.