Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம்(14.08.2016) “சத் – சித் - ஆணந்தம்” தனியாள் நடன நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆற்றுகையாளராக ஆ. ஸ்ரீகாந்த் பங்குபற்றினார். இன் நாடகத்திற்கான , ஒளி விதானிப்பு தி தர்மலிங்கம். உதவி
வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினால் திரு வே.பரமசிவம், திரு க.நடேசன், திரு.து.நவரத்தின ராசா ஆகியோரின் நினைவாக பெயர் கண்டு பிடிக்கும் போட்டி நடாத்தப்படவுள்ளது. இப்போட்டிக்கான பதில்களை 30-09-2016 ஆம் திகதிக்கு முன்பாக வல்வை விக்னேஸ்வர சேவா நிலையம் மடத்தடி வல்வெட்டித்துறை என்ற முகவரிக்கு...
வல்வை உதயசூரியன் கழக 54வது ஆண்டு விழா, இல்ல மெய்வல்லுனர் போட்டி வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை அன்று பிற்பகல் உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறவுள்ளது. வல்வை உதயசூரியன் கழக 54வது ஆண்டு விழாவின் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள வல்லிபுர ஆழ்வார் கோவில் நாளை மறுதினம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குத் தென்மேற்கே ஐநு்து மைல் தூரத்தில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம். மதுரை நகரின் இரு பிரதான பேருந்து நிலையங்களான அண்ணா பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் ஆகியவற்றிலிருந்து அடிக்கடி பேருந்துகள் ..
குரும்பகட்டி உதயசூரியன் விளையாட்டுக்கழகம் வடமராட்சி ரீதியாக நடாத்தி வந்த அணிக்கு 10 ஒவர் 11 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது
இதய பூமி அறகட்டளை நிதியத்தின் பங்களிப்புடன் வடமராட்சி லீக் நடாத்தும் வடக்கு கிழக்கு தமிழ் மாகாண முதன்மை லீக் அணிகள் பங்குபற்றும் உதைபந்தாட்ட சுற்றுபோட்டி முதல் சுற்று ஆட்டங்கள் பகல் இரவு போட்டியாக நெற்கெழு கழுகுகள் மைதானத்தில் நடைபெற்றது. வடமராட்சி லீக், மன்னார் லீக், மட்டக்களப்பு...
18. 08. 2016 அன்று கொழும்பு Galadari Hotel இல் நடைபெற்ற விருது வழங்கும் வைபவத்தில் திரு.சேந்தன் அவர்களுக்கு அவரது சேவையைப்பாரட்டி விருது வழங்கி கௌரவித்தனர். இவர் முன்நாள் பட்டினசபைத் தலைவர் திரு.ச.நடனசிகாமணி அவர்களின் பேரனும் க.திருநாவுக்கரசு (நில அளவையாளர்) அவர்களின் மகனுமாவார்.
டயலாக் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தங்கக் கோப்பைக்கான கரப்பந்தாட்ட போட்டிகளுக்கான விண்ணப்ப திகதி எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில் 22 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண்களுக்கான போட்டியாகவும், வயதெல்லை அற்ற பிரிவாகவும்...
குரும்பகட்டி உதயசூரியன் விளையாட்டுக்கழகம் வடமராட்சி ரீதியாக நடாத்தி வந்த அணிக்கு 10 ஒவர் 11 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகள் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழா எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 23 ஆம் திகதிமுதல் 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. மேற்படி விழாவில் தமது திரைப்படங்களை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் அவற்றை 23.08.2016 வரை சமர்ப்பிக்க முடியும். இவ்விழாவிற்காக தங்கள் திரைப்படங்களை இதுவரை ...
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி (B) கீழ்த்தளத்தில் 5 கடைகளும், மேல்தளத்தில் திறந்த மண்டபமும் இணைந்ததாகவும் முழுக்கட்டிடமும் நவீன சந்தை பழைய கட்டிடத் தொகுதியிலுள்ள இரு கடைகளையும் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம்
இதய பூமி அறகட்டளை நிதியத்தின் அனுசரனையுடன் வடமராட்சி லீக் நடாத்தும் வடக்கு கிழக்கு தமிழ் மாகாண முதன்மை லீக் அணிகள் பங்குபற்றும் உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
வல்வெட்டித்துறை சந்தியில் இருந்த பழைய பேரூந்து தரிப்பிடம் தற்பொழுது புனரமைக்கப்பட்டு, அங்கு பயணிகள் நலன் கருதி படிப்பகம் ஒன்று வல்வெட்டித்துறை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரால் இன்று திறக்கப்பட்டுள்ளது. இப் படிப்பகத்தினூடாக முதியவர்கள் மற்றும் பேரூந்திற்காக காத்திருப்போர் ...
தாஸை தேசியவீரன் என்று கொண்டாடி நினைவு கொள்ள முடிந்த அவர்களால் ஏன்தான் தாஸைவிட மூத்த போராளி, மிக மூத்த முன்னோடியான தேவனை (ரமேஸ்- பார்த்தசாரதி) நினைவு கொள்ள முடியாமல் போனது??? எனது பாடசாலை,கல்லூரி தோழனும் கம்பர்மலை சந்தியநாதன், கம்பர்மலை ரவீந்திரன் (பண்டிதர்) ...
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் சேதமடைந்து காணப்படும் பருத்தித்துறை – மருதங்கேணி வீதியின் முதற்கட்ட புனரமைப்பு பணிகள் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்லவினால் நேற்று புதன்கிழமை காலை 10 மணிக்கு செம்பியன்பற்றுப் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினரால் நடாத்தப்பட்ட youth got Talent show.(விசேட இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் போட்டியில் நிகழ்வில்) மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார் வல்வை சுலக்ஷன் . அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்...
கம்பிகளின் மொழி பிரேமின் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா நடைபெற்ற போது பிரேம் ஆற்றிய உரை சரியான முறையில் உலகத்தின் பல பாகங்களில் உள்ள வல்வை சங்கங்களுக்கு போய் சேரவில்லை. அதனால் உலகம் முழுவதும் பரவி வாழும் வல்வை மக்களின் பார்வைக்காக இந்த ஆக்கத்தை ..
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக வெள்ளவத்தைக்கும், வெள்ளவத்தையிலிருந்து பருத்தித்துறைக்கும் இடையிலான பகல்நேர தனியார் சொகுசு பஸ் சேவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இரு வழிகளிலும் இடம்பெற்றுவரும் இச் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி...
பொலிகண்டி பாரதி விளையாட்டுக்கழகம் உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடர் ஒன்றை நடாத்தி வருகின்றது. இதன் வரிசையில் நேற்று நடைபெற்ற போட்டியில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி மோதியது. கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி ஆட்டத்தின் முதலாவது ..
பழமுதிர்சோலை ” என்றழைக்கப்படும் அழகர் கோவிலானது மதுரையிலிருந்து வடக்கே 16 மைல் தூரத்தில் அழகர்மலை மீதுள்ளது. மதுரை நகரின் மத்தியில் உள்ள அண்ணா பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் இரண்டிலிருந்தும் அழகர் மலைக்குப் பேருந்துகள் செல்கின்றன. மதுரையை நோக்கி நாற்திசைகளிலிருந்தும் ...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 49வது ஆண்டு விழாவும் பாலர் தின விழாவும் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெற்றது....
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம் வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது
சில நேரங்களில் சிலரது பிரிவு நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது . நா . முத்துக்குமார் எனும் முத்தான வரிகளை தந்த இரண்டு தேசிய விருது கவிஞன் மறைவும் அப்படித்தான்
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின் 54 ஆவது நிறைவையொட்டி, அவ்விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படவுள்ள மாபெரும் விளையாட்டுப் போட்டி வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறை மடத்தடி உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெறவுள்ளது.
கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 41. 1975ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார்...
பருத்தித்துறை லீக்கின் அங்கத்துவ கழகங்களிலிருந்து தோற்ற இருக்கும் புதிய நடுவர்கள் பரீட்சைக்கான விண்ணப்பங்களை வடமராட்சி லீக் செயலாளர் அல்லது வடமராட்சி லீக் நடுவர்சங்க செயலாளரிடம் பெற்றுகொள்ளலாம்.
வல்வை மானாங்கனை ஒன்றியத்தின் அனுசரணையில் கம்பிகளின் மொழி பிறேம் எழுதிய 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது நேற்று சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு, வல்வை அமரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு முத்துஐயன்கட்டு ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.