ஊறணி சமுத்திரத்தில் பெருமளவு பக்தர்கள், தீர்த்தத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2015 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய மற்றும் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழாவில் இன்று காலை நிறைவு பெற்றுள்ளது. இன்றைய இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதிகாலை இடம்பெற்ற யாகாங்குர விசர்ச்சனம் மற்றும் சூர்ணோற்சவத்தினத் தொடர்ந்து, அம்பாள் காலை 0730 மணியளவில் ஊறணி தீர்த்தக் கடற்கரையைச் சென்றடைந்திருந்தார்.
தீர்த்தம் ஆடுதல் மற்றும் மற்றும் விசேட பூசைகள் சுமார் 10 மணி வரை இடம்பெற்றது.
ஏராளமான அடியார்கள் தீர்த்தமாடியதுடன் பல படகுகளும் கடலில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் புகை கூடுகள் வானில் ஏவப்பட்டன.
தீர்த்தஸ்நானம் அம்பாள் நெடியம்பதி விநாயகர் கோயிலைச் சென்றடைந்துள்ளார். இங்கிருந்து இரவு அம்பாள் ஆலயம் நோக்கி வருவார். .
கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை விடுமுறை தினங்கள் ஆகையால், நாட்டின் பிற இடங்களில் வசிக்கும் வல்வையர்கள் மற்றும் புலம் பெயர் வல்வையர்கள் என ஏராளமானோர் இன்றைய தீர்த்தோற்சவதில் கலந்து கொண்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.