Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வை அம்மன் கோயில் வரலாறு – பாகம் 8 – பா.மீனாட்சி சுந்தரம்

பிரசுரிக்கபட்ட திகதி: 22/05/2015 (வெள்ளிக்கிழமை)
ஆலயத்தின் அசையாச் சொத்துக்கள்
 
ஆலயத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குருக்கள் தங்கும் இடம் வ.இராமசாம்பிள்ளை அவர்களால் வாங்கப்பட்டு, ஆலயத்திற்கு தர்ம சாதனமாக எழுதப்பட்டுள்ளது. இந்தக் காணியின் பராமரிப்பாளராக (Trustee) அவரது மூத்த மகன் ஆனந்தவேல் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
முத்துமாரி அம்மன் கலாச்சார மண்டபம்
இது தவிர ஆலயத்திற்கு கிழக்குப் புறமாக உள்ள மடம் 1975 இல் நா.மார்க்கண்டு சகோதர்களால் ஆலயத்திகு தர்மசாதனமாக எழுதப்பட்டுள்ளது. வட பகுதியில் முன்னர் தபாற் கந்தோர் இருந்த காணியும் (தற்பொழுது கலாச்சார மண்டபம் அமைந்துள்ளது) ஆலயத்திற்கு தர்ம சாதனமாக எழுதப்பட்டுள்ளது.
 
ஆலயத்தின் வட மேற்குப்பகுதியில் குளத்துடன் 5 பரப்புக் கொண்ட ஒரு காணியும், சமரபாகு குறிச்சியில் 30 பரப்புக் கொண்ட ஒரு காணியும் தரும சாதனம் செய்யப்பட்டுள்ள போதிலும் அதன் பராமரிப்பாளர் யார் என்பது போன்ற முழு விபரமும் அறிய முடியாதிருக்கின்றது.
 
இதைவிட வவுனியா வைரவ புளியங்குளம் பகுதியில் 2 ஏக்கர் கொண்ட இன்னொரு காணியும் முத்துமாரி அம்மன் கோயிலுக்கும், நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோயிலுக்கும் தர்மசாதனம் செய்யப்பட்டு அதன் பராமரிப்பாளராக  தர்மசாதனம் செய்தவரின் உறவினரான ஐயாமுத்து அவர்கள் நியமிக்கப்படிருந்தார்.
 
ஆலயத்தில் நிறைவேற்றப்படும் நேர்த்திக்கடன்கள்
 
இவ் ஆலயத்தில் அடியார்கள் நேர்த்தி வைத்து தீக்குளிப்பு, கரகம், பாற்சொம்பு எடுத்தல் என்பவற்றை நிறைவேற்றிவைப்பார். இது தவிர சூரியனது கடும் வெப்பத்தினால் சின்னமுத்து, பொக்கிழிப்பான், செங்கண்மாரி போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் காலங்களில் நேர்த்தி வைத்து நீர்ச்சாதம் போன்றவற்றை அம்பாளுக்கு நைவேத்தியம் வைத்துக்கொள்வர்.
 
இன்னும் சில அடியார்கள் மடிப்பிச்சை எடுத்துவந்து ஆலயத்தில் காணிக்கை இடுவர். வேறு சிலர் நேர்த்தி வைத்து பொங்கல் இடுவர். உற்சவ காலங்களில் பல அடியார்களினால் அங்கப் பிரதட்சணை மேற்கொள்ளப்படும்.
கரகம் 
முத்துமாரியம்மன் உற்பத்தி மூர்த்தி விசேடம்
 
முன்னொரு காலத்தில் கைலயங்கிரி நாதனாகிய சிவபிரான் தனது பாகத்திலிருந்த பாலாம்பிகை அம்பிகையைப் பார்த்து தமது மேனியினின்றும் விபூதியை எடுத்துக் கொடுத்து, இதனைக் கொண்டு உலகில் ஐந்தொழில்களையும் நிகழ்த்தி வருக என்று பணித்தார். உமாதேவியார் தம்மில் இருந்து 7 பேரைத் தோற்றுவித்து தம்பணியைத் தொடரலானார். அவ்வாறு தோற்று விக்கப்பட எழுவரில் ஒருவரே முத்துமாரித் தாயார் என்று கூறப்படுகின்றது.
 
முத்து மாரியம்மன் கிழவி ரூபமாக  கோடியாக் கரையினின்றும் வந்து வல்வை வீற்றிருந்து அடியவர்களுக்கு அருளும் இம்மூர்த்தியை பலராலும் போற்றப் படுகின்ற சுயம்பு மூர்த்திக்கு ஒப்பாக போற்றுதலும் பொருத்தமாகும்.
பாற்செம்பு
அம்பாள் வலது பக்கக் கரங்களிலே வாளும் உடுக்கையும் இடது பக்கக்கரங்களிலே கபாலமும் சூலமும் பொருந்திய நான்கு கரங்களுடன் வலது திருப்பாதத்தை தொட்டுவிட்டு இடது திருப்பாதத்தை மடித்து வீற்றிருக்கின்றார். 
 
ஏந்திய வாழும் உடுக்கையும் மனித குலத்திற்கு துன்பம் செய்கின்ற கெட்ட ஆவிகளின் வலிமையை அடக்கி அவற்றினை நிலைகுலையச்செய்யும் பேற்றினை உணர்த்தி காத்தல் தொழிலை சிறப்பாக விளக்குகின்றது.
 
காபலத்தை ஏந்திய கரமானது பழியைச் செய்கின்றவர்களுக்கும் இரக்கமற்ற சிந்தனையுடைய மிருகங்களைப் போன்றவர்களுக்கும் தெய்வீக சிந்தனையற்ற வர்களுக்கும் திருந்தும்படியாக அவர்களது மனதைத்திருத்தி பக்தராக்கி உருகச்செய்கின்ற திருச்செயலை உணர்த்துகின்ற மானின் பார்வையைப் போன்ற கண், வருத்தமுடன் வரும் அடியார்கள் பால் கருணையைச் சொரிகின்றன.
தீக் கரகம் 
தாயாரரின்  மருட் பார்வையானது  அடங்காபிடாரிகள் ஒடுங்க அவர்களை அவர்களை அடக்கியே வைப்பது என்பதை உணர்த்துகின்றது. தாயார் எப்போதும் நாகபடத்தை தனது திருமுடிமேல் குடியிருப்பது தினமும் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சூரிய சந்திரர்களது ஒளி தமது திருமேனியின் பிரகாசத்தில் மழுங்காதிருக்க வேண்டும் என்ற கருணையிலே ஆகும்.
 
அக்காலத்தில் வாழ்ந்த கொடியவன் ஆன அரச குல மன்னன் ஆகிய மகிஷா சூரனோடு போர் புரிந்து அவன் சேனையை அழித்து அவனோடு சண்டையிட்டு அவனை வீழ்த்தி மார்பில் சூலத்தாற் குத்தி அவனை அழித்தார். அதன் காரணத்தினாலேயே அம்பாள் மகிஷாசுர மர்த்தினி என்றும் பெயர் பெற்றார். மழைக்கு மாரி என்னும் பெயர் உண்டு. அடியவர்களாகிய எங்கள் மீது அம்பாள் கருணையை மாரி போலப் பொழிந்து அவைகள் கலக்கமடையாமல் காப்பாற்றுகின்ற காரணத்தினால் மஹாமாரி எனப்படுகின்றாள்.
 நீர்ச்சாதம் 

மஹாமாரன் என்ற ஓர் அரசன் தனது சக்தியால் மருந்தால் நீக்கமுடியாத வைசூரி என்ற நோயை மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தான். இதன் காரணத்தால் அவனை வதம்செய்ய அம்பாள் மஹாமாரி என்னும் மாபெரும் ரூபத்தை எடுத்து, அந்த அசுரனைக் கொன்று வைசூரியைத் தீர்த்து வைக்கின்ற காரணத்தினாலும் மஹாமாரி எனப்படுவதுடன் கிராம தேவதையாகவும் போற்றப்படுகின்றாள்.

அம்பாள் அக்கினி சுவாலை போல் மேல் நோக்கிய கூந்தலை உடையவளாகவும் இருக்கின்றாள்.

அம்பாளின் கருவறையைச் சுற்றிவர வெளிப்பக்கமாக இருக்கும் கற்சுவர்களின் ஓரத்தில் ஒரு அடி அகலத்தில் 3 பக்கமும் கட்டப்பட்டிருக்கும் குழிவான தேக்கத்தில் நீர் நிறைத்து வைக்கப்பட்டிருப்பதை யாவரும் அறிவர். அம்பாள் குளிர் காற்றை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற காரணத்தினால் இப்படிக் கட்டப்பட்டு நீர் நிறைக்கப்பட்டிருக்கின்றது.
 
இறுதிப் பகுதி பின்னர் பிரசுரமாகும்.   

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
கரப்பந்தாட்டப் போட்டி - ரேவடி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2024 (புதன்கிழமை)
வல்வை சிவன் கோவில் தீர்த்தத் திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2024 (திங்கட்கிழமை)
VEDA மார்கழி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2024 (திங்கட்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வை சிவன் கோவில் பஞ்சரத பவனி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2024 (சனிக்கிழமை)
முன்பள்ளியில் பொதுசுகாதார பரிசோதகரால் விளக்கமளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/03/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை சிவன் கல்யாணத்திருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 21/03/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
பூச்சிய கழிவு தின செயற்றிட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2024 (செவ்வாய்க்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - கனகலிங்கம் இந்திரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2024 (திங்கட்கிழமை)
VEDA கார்த்திகை மாத அறிக்ககை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வெதுப்பகத்துக்கு சீல் வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2024 (சனிக்கிழமை)
புகையிரத ஆசன முன்பதிவு Online இல் மட்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
ரேவடி கடற்கரையோரம், மீன் சந்தைப் பகுதி சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகராசா குமாரதாஸ் (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பு - அமரர் அருட்செல்வம் இராமநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2024 (புதன்கிழமை)
வல்வை பெண்கள் கரப்பந்து தொடர் - Valvai Black Tigers வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2024 (செவ்வாய்க்கிழமை)
முன்பள்ளிகளிற்கு வர்ணக்கழிவுக் கூடைகள் விநியோகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2024 (செவ்வாய்க்கிழமை)
விளையாட்டுப் போட்டியில் பீரங்கி வண்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
கடற்கரை கபடி போட்டியில் சைனிங்ஸ் அணி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
மனநல மட்டத்தில் (MHQ) 2வது மிக உயர்ந்த தரவரிசையில் இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
சிதம்பரக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
ஆங்கில கற்கை நெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2024>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
567
8
9
10
1112
13
141516
1718192021
22
23
24
25
2627
28
2930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai