நெல்சிப் (NELSIP - The North East Local Services Improvement Project) திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புக்கு அமைய C.I.D யினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக உதயன் நாழிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது....
வடக்கில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் பெரும் நிதிமோசடி இடம்பெற்றதாக பல்வேறு தரப்பாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு விசாரணை நடாத்தக் கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.
இதன் அடிப்படியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விசாரணைகளை மேற்கொள்ள பணிப்பு விடுத்துள்ளார் . வடக்கில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரை (C.I.D - Crime Investigation Department) மேற்கொள்ள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சுன்னாகம் பிரதேச சபையில் சில தினங்களிற்கு முன்னர் நெல்சிப் திட்டம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் பணிபுரிந்த அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தொடர்பான விவரங்களும் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கண்டவாறு குறித்த பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சிப் திட்டமானது 2010 ஆண்டிலிருந்து 2014 வரையான 4 வருட காலப் பகுதியில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்திப் பணிகளில் ஒன்றாகும். உலக வங்கியின் 50 மில்லியன் ரூபா உதவி, இலங்கை அராசின் 34 மில்லியன் ரூபா மற்றும் இதர அமைப்புக்களின் 2 மில்லியன் ரூபா என மொத்தம் 86 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.